| யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது |
| காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது |
| யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது |
| இன்று பேசாமல் கண்கள் பேசுது |
| நகராமல் இந்த நொடி நீள |
| எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே |
| குளிராலும் கொஞ்சம் அனலாலும் |
| இந்த நெருக்கம் தான் கொல்லுதே |
| எந்தன் ஆளானது இன்று வேறானது |
| வண்ணம் நூறானது வானிலே |
| யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது |
| காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது |
| தீர தீர ஆசை யாவும் பேசலாம் |
| மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம் |
| என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் |
| இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டுக்கொள்ளலாம் |
| என்னாகிறேன் இன்று ஏதாகிறேன் |
| எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன் |
| எந்தன் நெஞ்ஜானது இன்று பஞ்சானது |
| அது பரந்தொடுது வானிலே |
| யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது |
| இன்று பேசாமல் கண்கள் பேசுது |
| மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே |
| அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே |
| வைரம் போல பெண்ணின் மனது உலகிலே |
| அது தோண்டும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே |
| கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி |
| என் பாதையில் இன்று உன் காலடி |
| நேற்று நான் பார்ப்பதும் இன்று நீ பார்ப்பதும் |
| நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி |
| யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது |
| காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது |
| யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது |
| இன்று பேசாமல் கண்கள் பேசுது |
| நகராமல் இந்த நொடி நீள |
| எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே |
| குளிராலும் கொஞ்சம் அனலாலும் |
| இந்த நெருக்கம் தான் கொல்லுதே |
| எந்தன் ஆளானது இன்று வேறானது |
| வண்ணம் நூறானது வானிலே |
Wednesday, April 16, 2014
யார் இந்த சாலை ஓரம்
Subscribe to:
Comments (Atom)