Tuesday, August 20, 2013

திருப்பாணாழ்வார்

கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்

கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.



காளமேகம்போன்ற வடிவையுடையனும் கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும்......என்னுடைய நெஞ்சை கொள்ளை கொண்டவனும் திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும் எனக்குப் பரமபோக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனையும்கண்ட கண்ட கண்கள் மற்றொன்றினைக்  காணமாட்டா.

No comments: