Thursday, July 12, 2012

நான் ரசிக்கும் கானங்கள் 3

எப்போ கேட்டாலும் நெகிழ  வைக்கும் பாடல்.  பத்மினியும் நதியாவும் பாட்டி  பேத்தியா வாழ்ந்திருப்பார்கள்.

Just addicted to this song


பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா ஆஆ .

பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா


அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்

தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் ,

கண்களும்ம் ஓய்தது ஜீவனும்ம் தேய்ந்தது

ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்

இந்த கண்ணீரில் சோகம் இல்லை இந்த ஆனந்தம் தந்தாய்

பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

……

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்

பாசம் வெளுக்காது மானே

நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்

தங்கம் கருக்காது தாயே

உன் முகம் பார்கிறேன் அதில் என் முகம் பார்கிறேன்


இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் ..

மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும் நான் உன் மகளாக வேண்டும்

பாச ராகங்கள் பாட வேண்டும்


பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வாஆஆ

பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா


No comments: